என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேகே நகரில் ரவுடிகள் கைது
நீங்கள் தேடியது "கேகே நகரில் ரவுடிகள் கைது"
கே.கே.நகரில் பயங்கர ஆயுதங்களுடன் 4 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.
போரூர்:
கே.கே.நகர் 102-வது தெருவில் சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கியிருப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி போலீசாருடன் அங்கு சென்றார். இரவு 10.30 மணி அளவில் போலீசார் கே.கே.நகரில் உள்ள அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த கக்கன் நகர், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (26), ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குரளரசன் (27), மேற்கு மாம்பலம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் (27), பூந்தமல்லி கீழ்மா நகரைச் சேர்ந்த சதீஷ் (38) ஆகிய 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினார்கள். அவர்கள் வைத்திருந்த 1½ கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஆதம்பாக்கம் சூளைமேடு, குன்றத்தூர், பூந்தமல்லி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பதும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் கைதான நாகூர் மீரான் மீது மட்டும் 17 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கே.கே.நகர் 102-வது தெருவில் சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கியிருப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி போலீசாருடன் அங்கு சென்றார். இரவு 10.30 மணி அளவில் போலீசார் கே.கே.நகரில் உள்ள அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த கக்கன் நகர், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (26), ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குரளரசன் (27), மேற்கு மாம்பலம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் (27), பூந்தமல்லி கீழ்மா நகரைச் சேர்ந்த சதீஷ் (38) ஆகிய 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினார்கள். அவர்கள் வைத்திருந்த 1½ கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஆதம்பாக்கம் சூளைமேடு, குன்றத்தூர், பூந்தமல்லி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பதும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் கைதான நாகூர் மீரான் மீது மட்டும் 17 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X